பாஞ்சாலி சபதம்
1. பிரம துதி நொண்டிச் சிந்து ஓமெனப் பெரியோர் கள்-என்றும் ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர் தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்நாமமும் உருவும் அற்றே-மனம் நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்; 1 நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;நன்றுசெய் தவம் யோகம்-சிவ ஞானமும் பக்தியும் நணுகிட வே,வென்றி கொள்சிவ சக்தி-எனை மேவுற வே,இருள் சாவுற வே,இன்றமிழ் நூலிது தான்-புகழ் ஏய்ந்தினி தாயென்றும்…