பகவத் கீதை முன்னுரை

1. புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது (கீதை, 2-ஆம் அத்தியாயம், 50-ஆம் சுலோகம்)இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம் அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலுந் தௌஒவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல், தௌஒந்த புத்தியே மேற்படி சுலோகத்திலே புத்தி சொல்லப்படுகிறது. அறிவைத் தௌஒவாக நிறத்திக் கொள்ளுதலாவது யாதென்றால், கவலை நினைப்புகளும் அவற்றுக்குக்காதாரமான பாவ நினைப்புகளுமின்றி அறிவை இயற்கை நிலைபெறத் திருத்துதல்….

Read More

சுயசரிதை

 1. கனவு “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்மெல்லப் போனதுவே.” — பட்டினத்துப்பிள்ளை முன்னுரை வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள் ச்ரத மன்றெனல் யானும் அறிகுவேன்;பாழ்க டந்த பரனிலை யென்றவர் பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை;ஊள் கடந்து வருவதும் ஒண்றுண்டோ? உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன் 1 மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்; மற்றும் இந்தப் பிரமத் தியல்பினைஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை அறிவி னுக்குப் புலப்பட லின்றியேதேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்…

Read More

பாஞ்சாலி சபதம்

 1. பிரம துதி நொண்டிச் சிந்து ஓமெனப் பெரியோர் கள்-என்றும் ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,தீமைகள் மாய்ப்பது வாய்,-துயர் தேய்ப்பது வாய்,நலம் வாய்ப்பது வாய்நாமமும் உருவும் அற்றே-மனம் நாடரி தாய்ப்புந்தி தேடரி தாய்,ஆமெனும் பொருளனைத் தாய்,-வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்; 1 நின்றிடும் பிரமம்என் பார்;-அந்த நிர்மலப் பொருளினை நினைதிடு வேன்;நன்றுசெய் தவம் யோகம்-சிவ ஞானமும் பக்தியும் நணுகிட வே,வென்றி கொள்சிவ சக்தி-எனை மேவுற வே,இருள் சாவுற வே,இன்றமிழ் நூலிது தான்-புகழ் ஏய்ந்தினி தாயென்றும்…

Read More

குயில் பாட்டு

  1. குயில் காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலேநீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறாவேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடிவந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5 செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; –அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10 வேடர் வாராத விருந்துத் திருநாளில்,பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்…

Read More

கண்ணன் பாட்டு

  1. கண்ணன் – என் தோழன் புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம்வத்ஸல ரசம் பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவ தற்கே – இனிஎன்ன வழியென்று கேட்கில், உபாயம் இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன் றில்லேன் – வந்திங்குஉன்னை யடைந்தேன்” என்னில் உபாயம் ஒருகணத் தேயுரைப் பான். 1 கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற் கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ்சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்…

Read More

பக்திப் பாடல்கள்

 விநாயகர் நான்மணிமாலை வெண்பா சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா – அத்தனே!நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்இன்றிதற்குங் காப்பு நீயே. (1) கலித்துறை நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம்நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. (2) விருத்தம் செய்யுந்தொழிலுன் தொழிலே காண்; சீர்பெற்றிட நீ யருள் செய்வாய், வையந் தனையும் வெளியினையும் வானத்தையு முன் படைத்தவனே! ஐயா, நான் முகப் பிரமா,…

Read More

பல்வகைப் பாடல்கள்

 காப்பு பரம்பொருள் வாழ்த்து ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து,மோனத் திருக்கு முழுவெண் மேனியான்;கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்;மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர்உருவகத் தாலே உணர்ந்துண ராதுபலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே;அதனியல் ஒளியுறும் அறிவாம்;அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். நூல் அச்சம் தவிர்.ஆண்மை தவறேல்.இளைத்தல் இகழ்ச்சி.ஈகை திறன்.உடலினை உறுதிசெய். 5 ஊண்மிக விரும்பு.எண்ணுவ துயர்வு.ஏறுபோல் நட.ஐம்பொறி ஆட்சிகொள்.ஒற்றுமை வலிமையாம். 10 ஓய்த லொழி.ஔடதங் குறை.கற்ற தொழுகு.காலம்…

Read More

ஞானப் பாடல்கள்

 1.அச்சமில்லை (பண்டாரப் பாட்டு) அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேதுச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேஇச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே 1 கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேநச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையேபச்சையூ னியைந்த வேற் படைகள்…

Read More

1. தேசிய கீதங்கள்

 1. தேசிய கீதங்கள் 1. வந்தே மாதரம் ராகம் – நாதநாமக்கிரியை; தாளம் – ஆதி பல்லவி வந்தே மாதரம் என்போம் – எங்கள்மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே) சரணங்கள் ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்வேதிய ராயினும் ஒன்றே – அன்றிவேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) ஈனப் பறையர்க ளேனும் அவர்எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?சீனத் தராய்விடு வாரோ? – பிறதேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) ஆயிரம்…

Read More

திருவள்ளுவர்

திருவள்ளுவர் அறிமுகம் ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர்…

Read More