பீர்பாலின் நகைச்சுவை பதில் – புகையிலை சம்பவம் | Akbar Birbal Tamil Story

பீர்பால் அடிக்கடி புகையிலை பயன்படுத்துவார். மன்னர் பலமுறை சொல்லியும், அந்த பழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ள முடியவில்லை.
அக்பரின் மூத்த அமைச்சருக்கு இந்த பழக்கம் மிகவும் பிடிக்காமல் இருந்தது. ஒருநாள், இதற்காக பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று அவர் திட்டமிட்டார்.

ஒருமுறை, மன்னர் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் இருந்தனர்.
அப்போது, தோட்டத்தின் வேலியோரத்தில் தானாக முளைத்த புகையிலைச் செடியைக் கழுதை ஒன்று சாப்பிட முயன்றது. ஆனால் இலையின் காரமும் நாற்றமும் பிடிக்காமல், அதைத் தின்றுவிடாமல் வெறுப்புடன் அங்கிருந்து போய் விட்டது.

அதைச் சுட்டிக்காட்டிய மூத்த அமைச்சர், சிரித்தபடி,

“மன்னரே, பாருங்கள்! நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்த புகையிலை, அந்தக் கழுதைக்குக் கூடப் பிடிக்கவில்லை!”
என்று சொன்னார். அவர் முகத்தில் திருப்தி புன்னகை தெரிந்தது.

உடனே பீர்பால் சிரித்துக் கொண்டு,

“அமைச்சரே, உண்மையே சொல்கிறீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் கழுதைகளுக்குத்தான் அது பிடிக்காது!”
என்று பதிலளித்தார்.

அவ்வாறு தனது நகைச்சுவை வாக்கால், மூத்த அமைச்சரை மவுனப்படுத்தினார் பீர்பால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *