1.அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே |
1 |
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. |
2 |
ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா! சரணங்கள்
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் 2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் 3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை) |
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே சரணங்கள்
1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை |
ராகம் – நாட்டை
பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா; சரணங்கள்
1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல் |
மனதி லுறுதி வேண்டும்,
நினைவு நல்லது வேண்டும், கனவு மெய்ப்பட வேண்டும், தனமும் இன்பமும் வேண்டும், கண் திறந்திட வேண்டும், பெண் விடுதலை வேண்டும், மண் பயனுற வேண்டும், உண்மை நின்றிட வேண்டும். |
கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
மண்ணில் தெரியுது வானம்,அதுநம் எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங் விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் |
1 |
என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு |
2 |
ராகம்-சக்கரவாகம் தாளம்-ஆதி பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன் சரணங்கள்
1. வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன் மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன் 2. ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன நாலாயிரம் காதம் விட்டகல்!உனைவிதிக்கிறேன்-ஹரி |
ராகம்-காம்போதி தாளம்-ஆதி உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? திண்மையுள்ளாரை நீ செய்வது |
1 |
எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
சித்தத் தெளிவெனுந் தீயின்முன் |
2 |
என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
உன்னைக் கெடுப்ப துறுதியென் |
3 |
சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
தேகம் பொய் யென்றுணார் தீரரை யென் |
4 |
இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
தொருமை கண்டார் முன்னம் ஓடாது |
5 |
நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
நாய்தரக் கொள்ளுமோ நல்லர |
6 |
என்னிச்சை கொண்டுனை யெற்றி விட வல்லேன் மாயையே!-இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்-மாயையே! |
7 |
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் |
8 |
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம் |
1 |
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் |
2 |
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர் |
3 |
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார் |
4 |
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண் |
1 |
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென் |
2 |
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
பித்த மதங்களி லேதடு மாறிப் |
3 |
வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ் |
4 |
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந் |
5 |
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று |
6 |
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு |
7 |
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை |
8 |
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை |
9 |
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன் |
10 |
உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்
|
1 |
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
|
2 |
எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
|
3 |
வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக்
|
4 |
தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்
|
5 |
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த்
|
6 |
எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே. |
7 |
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக் கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே. |
8 |
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே. |
9 |
எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. |
10 |
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்; பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே. |
11 |
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்; எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே. |
12 |
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற் றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. |
13 |
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்; என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே. |
14 |
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா! |
15 |
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா! |
16 |
எண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத் தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா! |
17 |
எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் |
18 |
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென் றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா! |
19 |
காவித் துணிவேண்டா,காற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே |
20 |
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! |
21 |
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா! சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற் |
22 |
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம் வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா! |
23 |
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன் சித்தமிசைக் கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா! |
24 |
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? |
1 |
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? |
2 |
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு |
3 |
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். |
4 |
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான், |
1 |
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான், |
2 |
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
இம்பர் வியக்கின்ற மாட கூடம் |
3 |
இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்; |
4 |
மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
தந்திரங் கோடி சமைத்துளோன் நான், |
5 |
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
கண்டநற் சக்திக் கணமெலாம் நான், |
6 |
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் |
7 |
சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட |
1 |
உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக் |
2 |
தோன்று முயிர்கள் அனைத்டும்நன் றென்பது
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை |
3 |
பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக் |
4 |
ராகம்-பிலஹரி
பல்லவி
பக்தியினாலெ-தெய்வ-பக்தியினாலே சரணங்கள்
1. பக்தியினாலே-இந்தப் சித்தந் தெளியும்,-இங்கு வித்தைகள் சேரும்,-நல்ல தத்துவ முண்டாம்,நெஞ்சிற் 2. காமப் பிசாசைக்-குதி தாமசப் பேயைக்-கண்டு தீமையை எண்ணி-அஞ்சுந் நாம மில்லாதே-உண்மை 3. ஆசையைக் கொல்வோம்,-புலை பாச மறுப்போம்,-இங்குப் மோசஞ் செய்யாமல்-உண்மை ஈசனைப் போற்றி-இன்பம் 4. சோர்வுகள் போகும்,-பொய்ச் பார்வைகள் தோன்றும்-மிடிப் சேர்வைகள் சேரும்,-பல தீர்வைகள் தீரும்-பிணி 5. கல்வி வளரும்,-பல அல்ல லொழியும்,-நல்ல சொல்லுவ தெல்லாம்-மறைச் வல்லமை தோன்றும்,-தெய்வ 6. சோம்ப லழியும்-உடல் கூம்புத லின்றி நல்ல வீம்புகள் போகும்-நல்ல பாம்பு மடியும்-மெய்ப் 7. சந்ததி வாழும்,-வெறுஞ் ‘இந்தப் புவிக்கே-இங்கொர் கந்தமலர்த்தாள்-துணை; சிந்தையறிந்தே-அருள் |
1. ”பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப 2. ஏட்டைத் துடைப்பது கையாலே-மன வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக் 3. காற்றை யடைப்பது மனதாலே-இந்தக் சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர் |
”காட்டு வழிதனிலே-அண்ணே!
வீட்டுக் குலதெய்வம்-தம்பி |
1 |
”நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால் |
2 |
கடமை புரிவா ரின்புறுவார்
கடமை யறிவோம் தொழிலறியோம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய், கடமை நினைவுந் தொலைத் திங்கு |
இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? |
1 |
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள் யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர் ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்; |
2 |
சென்றதினி மீளாது மூடரே!நீர்
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர் தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்; |
பேயா யுழலுஞ் சிறுமனமே!
நீயா யொன்றும் நாடாதே தாயாம் சக்தி தாளினிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய் பா.-13 |
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்! ஒன்றையே பற்றி யூச லாடுவாய் அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய் விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் |
5 |
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய் புதியது காணிற் புலனழிந் திடுவாய் புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய் அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல் பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் |
10 |
பழமையே யன்றிப் பார்மிசை யேதும் புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ! பிணத்தினை விரும்புங் காக்கையே போல அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய். |
15 |
அங்ஙனே, என்னிடத் தென்று மாறுத லில்லா அன்புகொண் டிருப்பாய்,ஆவிகாத் திடுவாய், கண்ணினோர் கண்ணாய்,காதின் காதாய்ப் புலன்புலப் படுத்தும் புலனா யென்னை |
20 |
உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய், இன்பெலாந் தருவாய்,இன்பத்து மய்ங்குவாய், இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய், இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய் இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், |
25 |
தன்னை யறியாய்,சகத்தெலாந் தொளைப்பாய், தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக் காணவே வருந்துவாய்,காணெனிற் காணாய், சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய், பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் |
30 |
மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்! நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்; இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்; |
35 |
உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன். |
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! 1. புகை நடுவினில் தீயிருப்பதைப் பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான். (பகைவ) 2. சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக் 3. உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில் தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும் 4. வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற 5. போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர் நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு 6. தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள் |
எல்லா மகிக் கலந்து நிறைந்தபின்
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின் |
1 |
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் |
2 |
சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
எத்தனை கோடி இடர்வந்து சூழினும் |
3 |
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
பொய்கருதாம லதன்வழி நிற்பவர் |
4 |
ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு |
5 |
கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குக்
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச் |
1 |
திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
வெருவுற மாய்வார் பலர் கடலில்-நாம் |
2 |
அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன் |
3 |
எக்கால மும்பெரு நேராகும்-நம்மை
பக்குவத் தேயிலை நீர் குடிப்போம்-அங்குப் |
4 |
இன்னமு திற்கது நேராகும்-நம்மை
நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்-நம்மை |
5 |
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குக்
அழகிய பொன்முடி யரசிகளாம்-அன்றி |
6 |
செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குச்
சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டைத் |
7 |
கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர் |
8 |
குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்-அந்தக்
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர் |
9 |